×

பந்தலூர் அஞ்சலகத்தில் இணைய சேவை பாதிப்பு

பந்தலூர், நவ.28:  பந்தலூர் அஞ்சலகத்தில் இணையசேவை பாதிப்பால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். பந்தலுார் அஞ்சலகத்தில் பொதுமக்கள் சிறுசேமிப்பு செய்து வருகின்றனர் அதனால் அன்றாடம் பணம் செலுத்துவது மற்றும் பெறுவது, வைப்புதொகை. காப்பீடு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் வாடிக்கையாளர்கள் சென்று வருகின்றனர்.கடந்த சில நாட்களாக பந்தலூர் அஞ்சலகத்திற்கு வாடிக்கையாளர்கள் சென்றால் இணையசேவை இல்லை என ஊழியர்கள் கூறுவதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.  இப்பகுதியில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள், அன்றாட கூலிவேலை செய்பவர்கள் தங்களுடைய பணிகளை விட்டு அஞ்சலகம் செல்லும் போது பாதிக்கப்படுகின்றனர். எனவே அஞ்சலகத்தில் இணைய சேவையை முறைப்படுத்தி வாடிக்கையாளர்களை அலைக்கழிக்காமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



Tags : Post Office ,
× RELATED 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணர்வு